Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வருசநாடு பகுதியில் சூறைக்காற்றுக்கு தென்னை, பப்பாளி மரங்கள் சேதம்: விவசாயிகள் கவலை

வருசநாடு: வருசநாடு அருகே நேற்று முன் தினம் மாலை சூறைக்காற்று வீசியதால் தென்னை, பப்பாளி மரங்கள் விழுந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ளது காமன்கல்லூர் மலைக்கிராமம். இந்த பகுதியில் நேற்று முன் தினம் மாலை 3 மணியளவில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் மரங்கள் ஆட்டம் கண்டன. சாலையில் நடந்து செல்வோரை கீழே தள்ளிவிடும் அளவிற்கு பலத்த காற்று வீசியதாக கிராம மக்கள் கூறினர். இதனால் காமன்கல்லூர் மலைக்கிராமத்தில் பல்வேறு பகுதிகளில் தனியார் தோப்புகளில் தென்னை மரங்கள் சரிந்து விழுந்து சேதமடைந்தன. இதேபோல, பப்பாளி மரங்களும், பல்வேறு மரங்களின் கிளைகளும் உடைந்து சேதமடைந்தன. 2வது நாளாக இன்றும் பலத்த காற்று வீசியது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: திடீரென பலத்த சூறைக்காற்று வீசியதால் இந்த பகுதியில் இளநீர், காய்களுடன் கூடிய ெதன்னை மரங்களும், பப்பாளி மரங்களும் அதிகளவில் முறிந்து விழுந்தன. இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பகுதியில் வருவாய்த்துறையினர் நேரில் ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.