வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்
மதுரை : நீதிபதி ஜி.எஸ். சுவாமிநாதனுக்கு எதிராக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அளித்த புகார் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுப்பது தொடர்பாக தலைமை நீதிபதி உரிய முடிவெடுப்பார் என்று நீதிபதி சுவாமிநாதன் தெரிவித்தார்.