அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி புதிய கட்டுப்பாடு

  சென்னை: கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் அதிமுகவினர் எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். கூட்டணி தானாக நடக்கும்; கவலை வேண்டாம் என மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறினார். ...

அதிமுக அழைப்பை நிராகரித்தது தவெக

  சென்னை: தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் அதிமுகவின் கூட்டணி அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது. 2026 தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட அனைத்து முடிவுகளை எடுக்க விஜய்க்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவும், பாஜகவும் மாறி மாறி கூட்டணிக்கு அழைத்த நிலையில் விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என தவெக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தவெக தங்கள்...

வாக்கு திருட்டு மூலம் பீகாரிலும் ஆட்சியை பிடிக்க பாஜக முயல்வதாக ராகுல் குற்றச்சாட்டு

  டெல்லி: வாக்கு திருட்டு மூலம் பீகாரிலும் ஆட்சியை பிடிக்க பாஜக முயல்வதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் என்பது ஜனநாயகத்தை அழிக்க பாஜகவின் புதிய ஆயுதம் என்று கூறினார். மேலும் ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக ஆதாரத்தை ராகுல் வெளியிட்டார். ஹரியானாவில் மொத்த...

தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 7-11 செ.மீ. வரை கனமழை பெய்ய வாய்ப்பு என்பதால் நவ.5,6,7,8 ஆகிய தேதிகளில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் 7 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு...

வாக்குத் திருட்டால் ஹரியானா தேர்தல் முடிவு மாறியது: ராகுல் காந்தி

  டெல்லி: ஹரியானா தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாலேயே காங்கிரஸ் வெற்றி பெற முடியவில்லை என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஹரியானாவில் வழக்கத்துக்கு மாறாக தபால் ஓட்டுகள் அனைத்துமே வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளுக்கு எதிராக இருந்தன. அனைத்து கருத்துக் கணிப்புகளும் காங்கிரசுக்கே வெற்றி என கூறின. மோசடிகள் நடக்காமல் இருந்திருந்தால் ஹரியானா...

டி.என்.ஏ. பரிசோதனைக்கு தயார் - மாதம்பட்டி ரங்கராஜ்

சென்னை: மிரட்டலின்பேரில் ஜாய் கிறிசில்டாவை 2வது திருமணம் செய்ததாக மாதம்பட்டி ரங்கராஜ் விளக்கம் அளித்தார். மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை. மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்வேன். டி.என்.ஏ. சோதனை மூலம் குழந்தை என்னுடையது என்று நிரூபித்தால் கவனித்துக் கொள்வேன். மகளிர் ஆணைய விசாரணையின்போது ஜாய் கிறிசில்டா மாதம்...

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

  சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. உட்கட்சி பூசல் அதிகரித்துள்ள நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில்...

திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

திருப்பூர்: திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமூர்த்தி மலையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பஞ்சலிங்க அருவிக்கு செல்லும் இரும்பு பாலம் சேதமடைந்தது. பஞ்சலிங்க அருவிக்கு செல்லும் இரும்பு பாலம் சரிசெய்யப்பட்ட நிலையில் 12 நாட்களுக்கு பிறகு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ...

இளையோர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான வெற்றி கோப்பையை அறிமுகப்படுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இளையோர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான வெற்றி கோப்பையை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார். உலகக் கோப்பையை அறிமுகப்படுத்தி போட்டிக்கான காங்கேயன் இலச்சினையை முதலமைச்சர் வெளியிட்டார். விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஹாக்கி இந்தியா இணைந்து 14வது ஆடவர் இளையோர் ஹாக்கி போட்டியை நடத்துகின்றன. இளையோர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நவ.28 முதல் டிச.10 வரை...

மிர்சாப்பூரில் ரயில் மோதி 5 பக்தர்கள் உயிரிழப்பு

லக்னோ: உத்தரப்பிரதே மாநிலம் மிர்சாப்பூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 5 பக்தர்கள் ரயில் மோதி உயிரிழந்தனர். சுனார் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பக்தர்கள் மீது பயணிகள் ரயில் மோதியது. ஹவுராவில் இருந்து கல்கா சென்றுகொண்டிருந்த கல்கா விரைவு ரயில், பக்தர்கள் மீது மோதியது. கங்கை நதியில் புனித நீராடுவதற்காக சுனார் ரயில்...