ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு அக்.3 வரை காவல்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்ட ரவுடி வரிச்சியூர் செல்வத்தை அக்.3 வரை சிறையிலடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்த வரிச்சியூர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர். வரிச்சியூர் செல்வத்தை அக்.3 வரை சிறையிலடைக்க Live திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ...

விளம்பர படப்பிடிப்பில் ஜூனியர் என்டிஆர் காயம்

ஐதராபாத்: ஐதராபாத்தில் விளம்பர படப்பிடிப்பில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் லேசான காயம் அடைந்தார். அடுத்த சில வாரங்கள் ஓய்வெடுக்க நடிகர் ஜூனியர் என்டிஆருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்; முழுமையாக குணமடையும் வரை ஓய்வெடுக்க அறிவுறுத்தல்; உடல் நிலை சீராக உள்ளது. ரசிகர்கள், ஊடகங்கள், பொதுமக்கள் ஊகக் கருத்துகளை தவிர்க்குமாறு ஜூனியர் என்டிஆர் அலுவலகம் வேண்டுகோள்...

சென்னையில் பல்வேறு இடங்களில் மழை

  சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. வளசரவாக்கம், விருகம்பாக்கம், வடபழனி பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நுங்கம்பாக்கம், வள்ளுவர்கோட்டம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ...

வால்பாறையிலும் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

  ஊட்டி, கொடைக்கானல் போன்று வால்பாறையிலும் நவம்பர் 1 முதல் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது தொடர்பாக வரும் டிசம்பரில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., குழு நீதிமன்றத்தில் பதில் தெரிவித்துள்ளது.   ...

கேரள மாநிலம் வயநாட்டுக்கு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி வருகை!

  கேரள மாநிலம் வயநாட்டுக்கு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரும் வந்து சேர்ந்தனர். ஏற்கனவே பிரியங்கா வயநாடு மக்களை சந்தித்து பிரச்சினையை கேட்டறிந்த நிலையில் இருவரும் வருகை தந்துள்ளனர். கேரள மாநில காங். கட்சி மூத்த நிர்வாகிகளை சந்தித்து சோனியா, ராகுல் பேச வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ...

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

  சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, நீலகிரி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது.   ...

குளித்தலை அருகே ரயில் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு

  குளித்தலை: குளித்தலை அருகே ரயில் மோதியதில் பெண் உயிரிழந்தார். விபத்தைக் காண வந்த மாற்றுத்திறனாளி நபரும் வேறொரு ரயில் மோதி உயிரிழந்தார். அன்னக்கிளி (52) விபத்தில் உயிரிழந்ததை அறிந்த அப்பகுதியினர் அங்கு சென்றனர். காது கேளாத வாய் பேச இயலாத ராஜலிங்கம் தண்டவாளத்திலேயே நடந்துவரும் போது ரயில் மோதி உயிரிழந்தார். ...

தமிழ்நாட்டில் உள்ள 42 கட்சிகளின் பதிவு ரத்து: தேர்தல் ஆணையம் உத்தரவு

  டெல்லி: தமிழ்நாட்டில் உள்ள 42 கட்சிகளின் பதிவுகளை ரத்து செய்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு அளித்துள்ளது. 2019 முதல் தொடர்ச்சியாக 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த கட்சிகளின் பதிவுகள் ரத்து செய்தது. தேர்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்யாத கட்சிகளின் பதிவுகளையும் ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. ...

சிங்கம்புணரி அருகே கோழியை விழுங்கி கம்பி வேலியில் சிக்கிய 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு

  சிவகங்கை: சிங்கம்புணரி அருகே கோழியை விழுங்கி கம்பி வேலியில் சிக்கிய 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளது. மலைப்பாம்பை லாவகமாக மீட்ட தீயணைப்புத்துறையினர், வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.   ...

வாக்குத் திருட்டை கண்டித்து நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

  நெல்லை: வாக்குத் திருட்டை கண்டித்து நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வாக்காளர் பட்டியலை தீயிட்டு கொளுத்தி காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   ...