சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,11,200க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,11,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,900க்கு விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,600 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250க்கும், கிலோ ரூ. 2.50 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது....

கால்நடை மருத்துவப் படிப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்..!!

சென்னை: கால்நடை மருத்துவப் படிப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். கால்நடை மருத்துவ அறிவியல் பட்டப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார். ...

முதலமைச்சர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய வழக்கை வாபஸ் பெற்றார் அவரது மனைவி சங்கீதா!!

செங்கல்பட்டு: முதலமைச்சர் விஜய்யிடம் விவாகரத்து கோரிய வழக்கை அவரது மனைவி வாபஸ் பெற்றார் . காணொலி காட்சி வாயிலாக ஆஜரான சங்கீதா, விவாகரத்து வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். மனுவை சங்கீதா வாபஸ் பெற்றதை அடுத்து வழக்கை முடித்து வைத்தது செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம். ...

தனியாக இருக்கும் பெண்களை இரவில் திருட்டுத்தனமாக ஆபாச வீடியோ எடுத்தவர் கைது!

நெல்லை: நெல்லை அருகே தனியாக இருக்கும் பெண்களை இரவில் திருட்டுத்தனமாக ஆபாச வீடியோ எடுத்த பீர்முகமது (23) என்பவர் பிடிபட்டார். பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து தப்பிச் சென்றவரை திருவனந்தபுரத்தில் நெல்லை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றன. ...

3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!!!

கோவை, தேனி, நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், சென்னையில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...

கன்னியாகுமரியில் ஆடி அமாவாசை திருவிழா முன்னிட்டு உள்ளூர் விடுமுறை!!

கன்னியாகுமரி: ஆடி அமாவாசை திருவிழா வருகிற 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, வரும் 12-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 22-ம் தேதி பணி நாளாக செயல்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். ...

வேளாண்துறை அமைச்சரின் தொகுதியிலேயே மழை நீரில் நெல் மிதக்கிறது: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

சென்னை: வேளாண்துறை அமைச்சரின் தொகுதியிலேயே மழை நீரில் நெல் மிதக்கிறது என்று பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார். நீட், காவிரி, மேகதாது பிரச்சனையில் அனைத்து கட்சியினருடன் சென்று பிரதமரை முதல்வர் சந்திக்க வேண்டும். கர்நாடகாவில் காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளன. காவிரி பிரச்சனைக்கு தீர்வு ஒன்றிய அரசிடம் தான் உள்ளது என கூறினார்....

வாணியம்பாடி காஜா நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு வீட்டில் திடீரென பெரும் தீ விபத்து

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காஜா நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு வீட்டில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றபோது, அங்கிருந்த ஏ.சி. கம்ப்ரஸர் வெடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. அதிர்ஷ்டவசமாக, விபத்து நேரிட்ட சமயத்தில் வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். வீட்டில் தீ...

மேகமலை மற்றும் வருசநாடு மலைக் கிராமங்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் வெளியேற்ற வனத்துறை... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீவிரப் போராட்டம்.

தேனி: மேகமலை மற்றும் வருசநாடு மலைக் கிராமங்களில் வசிக்கும் பாரம்பரிய குடிகளை "ஆக்கிரமிப்பாளர்கள்" எனக் கூறி வெளியேற்ற வனத்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M) மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் தலைமையில் தும்மக்குண்டு உள்ளிட்ட 98 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இணைந்து தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ...

மக்கள் வரவேற்கும் திட்டங்கள் எந்த ஆட்சி வந்தாலும் தொடர வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

சென்னை: சட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தில் தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றியுள்ளார். மக்கள் வரவேற்கும் திட்டங்கள் எந்த ஆட்சி வந்தாலும் தொடர வேண்டும்; விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகள் நிலையை புரிந்து நெல் மூட்டைகளை நனையாமல் சேமிக்க வேண்டும் என்று அவர் கூறினார். ...