கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை ஒட்டி உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பு
நீலகிரி: கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை ஒட்டி உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 'நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்ட சுற்றுலா தலங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டும்.வனப்பகுதிகளுக்குள் வீடியோ எடுக்கவும், டிரோன் பறக்கவிடவும் தடை. தடையை மீறி வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என வனத்துறை தெரிவித்துள்ளது. ...
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபங்கள் ஏற்றியதற்கான சான்றுகள் உள்ளதா? நீதிபதிகள் கேள்வி
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபங்கள் ஏற்றியதற்கான சான்றுகள் உள்ளதா? நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 1996-ல் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றவேண்டும் என நீதிமன்ற உத்தரவில் இல்லை; திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உத்தரவை அவசரமாக நிறைவேற்ற தனி நீதிபதி ஏன் உத்தரவிட்டார்? மலை உச்சியில் தீபம் ஏற்ற குறுக்கு வழியை...
பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி
சென்னை: பச்சைத்துண்டு போட்டுக்கொண்டு பச்சைத் துரோகம் செய்பவருக்கு மீண்டும் விவசாயிகள் கண்ணில் தெரியவில்லையா? எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வளவு குனிந்து கும்பிடு போடும் உங்களது கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயர் எதற்கு? கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் திட்டம் குறித்து எதிர்க்கட்சியான அதிமுகவின் நிலைப்பாடு என்ன?...
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை: முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 'கடந்த 3 ஆண்டுகளாகவே தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சியில் சாதனை படைத்து வருகிறது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 16 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2023-24ல் தமிழ்நாட்டின் பொருளாதார மதிப்பு ரூ.26.88 லட்சம் கோடியாக இருந்தது. 2024-25ல்...
மணிப்பூர் கலவரம் தொடர்பாக விசாரணை ஆணையம் அறிக்கை அளிக்க கால அவகாசம் நீட்டிப்பு
டெல்லி: மணிப்பூர் கலவரம் தொடர்பாக விசாரணை ஆணையம் அறிக்கை அளிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 20 மே 2026க்குள் அறிக்கை தர வேண்டும் என்று விசாரணை ஆணையத்துக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் லம்பா தலைமையில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக விசாரிக்க 2023ல் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. விசாரணை ஆணையத்துக்கு...
திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி கனகராஜன் உத்தரவு பிறப்பிக்கவில்லை: நீதிபதிகள்
மதுரை: 'திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி கனகராஜன் உத்தரவு பிறப்பிக்கவில்லை.1996-ல் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றவேண்டும் என நீதிமன்ற உத்தரவில் இல்லை' என உயர்நீதிமன்றக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மனு விசாரணைக்கு ஏற்றதா என்பது குறித்து மட்டும் வாதிட வேண்டும் என மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். ...
தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் வரும் 22ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகிறார்
சென்னை: தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் வரும் 22ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகிறார். தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பின் முதல்முறையாக வருகை; கூட்டணி விவகாரங்கள், தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளது. சென்னை வரும் பியூஸ் கோயல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வாய்ப்பு உள்ளது....
காந்தியின் பெயரை நீக்கிவிட்டு இந்தியை திணிக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது: கி.வீரமணி
சேலம்: காந்தியின் பெயரை நீக்கிவிட்டு இந்தியை திணிக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு ஈடுபட்டுள்ளது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கும் பாஜகவின் எண்ணம் நிறைவேறாது எனவும் கி.வீரமணி ஆத்தூரில் பேட்டியளித்துள்ளார். ...
திண்டுக்கல் - சபரிமலைக்கு ரயில்தடம்?
டெல்லி: தமிழகத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடி பேர் சபரிமலை செல்கிறார்கள். திண்டுக்கல் - சபரிமலை லோயர் கேம்புக்கு ரயில் தடம் வந்தால் மக்கள் பயன்பெறுவர். திண்டுக்கல்லில் இருந்து சபரிமலைக்கு ரயில் தடம் அமைக்கப்படுமா? என தேனி தொகுதியின் திமுக எம்.பி. தங்கதமிழ்ச்செல்வன் மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதுகுறித்து ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு...
