Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

விடுமுறையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும்

கூடுவாஞ்சேரி: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கோடை விடுமுறையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என பூங்கா நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. சென்னை அடுத்த வண்டலூரில் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதனை காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து கண்டுகளித்துவிட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கோடை விடுமுறையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பூங்கா நிர்வாகம் தனது செய்தி குறிப்பில் கூறுகையில், ‘வண்டலூர் உயிரியல் பூங்காவில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று பூங்கா பராமரிப்பு பணிக்காக பூங்கா விடுமுறை விடுவது வழக்கம்.

இந்நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மே மாதம் விடுமுறை விடப்பட்டுள்ளதால் வண்டலூர் பூங்காவுக்கு குடும்பத்துடன் வந்து கண்டு களிப்பதற்காக இன்று (செவ்வாய்கிழமை) வண்டலூர் உயிரியல் பூங்கா வழக்கம்போல் திறந்து இருக்கும்.

இவ்வாறு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.