Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

டிக்டாக்கில் வீடியோ போட்ட மகள் சுட்டு கொலை: பாக். நபர் வெறிச்செயல்

கராச்சி: பாகிஸ்தானில் டிக் டாக்கில் வீடியோவை பதிவிட்டதற்காக 15 வயது சிறுமியை அவரது தந்தை சுட்டு கொன்றார். சுட்டு கொல்லப்பட்ட சிறுமி பாகிஸ்தானில் உள் குவெட்டா நகரை சேர்ந்தவர். அமெரிக்காவில் படித்து வந்த சிறுமி கடந்த 15ம் தேதி குவெட்டாவுக்கு வந்தார். சிறுமி டிக்டாக்கில் வீடியோ போடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அது அவரது தந்தைக்கு பிடிக்கவில்லை. டிக் டாக்கில் வீடியோ பதிவிடக்கூடாது என்று அவர் மகளை எச்சரித்துள்ளார். இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமையன்று அந்த சிறுமி டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டார். இதில் ஆத்திரமடைந்த தந்தையும் உறவினர் ஒருவரும் சேர்ந்து சிறுமியை சுட்டு கொன்றனர். இது தொடர்பாக சிறுமியின் தந்தையும், உறவினரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.