Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போலி வாக்காளர் அட்டை ஆக.16க்குள் ஒப்படைக்க தேஜஸ்விக்கு கெடு

பாட்னா: பீகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடந்து வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. இதற்கு பீகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் எதிர்ப்பு தெரிவித்தார். ஆக.2ஆம் தேதி அவர் கூறுகையில் வரைவு வாக்காளர் பட்டியலில் எனது பெயர் இல்லை என்று தெரிவித்தார். ஆனால் தேஜஸ்வி பெயர் பட்டியலில் இருப்பதாக ஆணையம் தெரிவித்தது. அப்போது தேர்தல் ஆணையம் தெரிவித்த வாக்காளர் அடையாள அட்டையும் தன்னிடம் இருப்பதாக தேஜஸ்வி தெரிவித்தார். இருப்பினும் 2 அடையாள அட்டைகளை வழங்கியதாக ஆணையம் மீது குற்றம் சாட்டினார். இதற்கு பதிலடியாக போலியான அரசாங்க ஆவணத்தை உருவாக்கி பயன்படுத்துவது குற்றம் என்றும், ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்குள் போலியான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை தேஜஸ்வி சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கெடு விதித்துள்ளது. இது தொடர்பாக திகா சட்டப்பேரவை தொகுதிக்கான துணைப் பிரிவு மாஜிஸ்திரேட் பாட்னா (சதர்) மற்றும் தேர்தல் பதிவு அதிகாரி, தேஜஸ்விக்கு கடிதம் எழுதியுள்ளார்.