Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்பட 11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அரியலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 23 மாவட்டங்களில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, கோவை, திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடியில் கனமழை பெய்யக்கூடும்.

டிச.13ல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிச.16, 17ல்செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.