Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மாணவன் மாயம்

காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம் மாகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முரளி மகன் ராஜசேகர் (19). தண்டலத்தில் உள் தனியார் பொறியியல் கல்லூரியில் பிடெக் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், வீட்டிற்கு தெரியாமல் கல்லூரி மூலமாக இன்டெர்ன்ஷிப் வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ராஜசேகர் வேலைக்கு செல்வது வீட்டிற்கு தெரிந்த நிலையில், தந்தை முரளி மகனை கண்டித்துள்ளார். இதனால், கோபித்துக்கொண்ட ராஜசேகர் நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, மாணவனின் தாய் சசிகலா, விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், மாயமான மாணவனை தேடி வருகின்றனர்.