Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பங்குகள் வடிவிலான 5, 30 ஆண்டுகால பிணையப்பத்திரங்கள் ஏலம் மூலம் விற்பனை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பங்குகள் வடிவிலான 5 மற்றும் 30 ஆண்டு கால பிணையப் பத்திரங்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.2000 கோடி மதிப்பில் ரூ.1000 கோடி மதிப்பு பங்குகள் வடிவிலான 5 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் மற்றும் ரூ.1000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 30 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் செப்டம்பர் 10ம்தேதி அன்று நடத்தப்படும். போட்டி ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில், மின்னணு படிவத்தில் செப்டம்பர் 10ம்தேதி அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.