சென்னை: செகந்திராபாத் - சென்னை இடையே பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. செகந்திராபாத்தில் இருந்து மாலை 6.40க்கு புறப்பட்டு நாளை காலை 8 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இண்டிகோ விமானம் ரத்து காரணமாக பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டது. எழும்பூரில் இருந்து நாளை நண்பகல் 12.30க்கு புறப்பட்டு திங்கட்கிழமை அதிகாலை 3 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.
+
Advertisement

