Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சம்பள கணக்குகளை நிர்வகிக்க எஸ்பிஐயுடன் சிஐஎஸ்எப் ஒப்பந்தம்

சென்னை: மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) வீரர்களின் சம்பள கணக்குகளை நிர்வகிக்க எஸ்பிஐயுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. டெல்லியில் உள்ள சிஐஎஸ்எப் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சிஐஎஸ்எப் டிஐஜி ரேகா நம்பியார் மற்றும் மும்பை எஸ்பிஐ கார்ப்பரேட் மைய பொது மேலாளர் ரஞ்சனா சின்ஹா ​​ஆகியோர் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் வருகிற 23.5.25 முதல் 22.5.28 வரை 3 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் சிஐஎஸ்எப் உறுப்பினர்களின் நலன் மற்றும் நிதி பாதுகாப்பிற்கான தொடர்ச்சியான உறுதிப்பாட்டில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும். சேவை செய்யும் பணியாளர்களுக்கான பணியாளர் விபத்து காப்பீட்டு தொகையை ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.1 கோடியாகவும், ஓய்வூதியதாரர்களுக்கு 30 லட்சத்திலிருந்து 50 லட்சமாகவும் உயர்த்துவது முக்கிய அம்சங்களில் அடங்கும். விமான காப்பீடு ரூ.1.5 கோடியாக (நிபந்தனையுடன்) அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் சலுகைகளில் காலக்கெடு காப்பீடு, மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பீட்டு தொகை, பூஜ்ஜிய இருப்பு இல்லாத கணக்கு, வருடாந்திர பராமரிப்பு இல்லாத இலவச டெபிட் கார்டுகள், வரம்பற்ற இலவச எஸ்பிஐ ஏடிஎம் பரிவர்த்தனைகள் மற்றும் மத்திய ஆயுத காவல் சம்பள தொகுப்பின் கீழ் பிற வங்கி ஏடிஎம்களில் மாதத்திற்கு 10 இலவச பரிவர்த்தனைகள் ஆகியவை அடங்கும். இந்த தகவலை சென்னை துறைமுக ஆணைய செயலாளர் தெரிவித்துள்ளார்.