Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை உண்ணாவிரதம்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படை சிறைபிடித்த 49 மீனவர்களையும், பறிமுதல் செய்த 9 படகுகளையும் விடுவிக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்படும் மீனவர்களின் குடும்பங்களை பாதுகாக்க அரசு உதவ வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் கடந்த 11ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒன்றிய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில், ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் நேற்று சங்கத் தலைவர் ஜேசுராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர். அடுத்த கட்டமாக நாளை சுதந்திர தினத்தன்று மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.