டெல்லி: உலகின் உயரமான ரயில்வே பாலத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை ஜம்மு-காஷ்மீர் செல்கிறார். பஹல்காம் தாக்குதலுக்குப் பின் முதன்முறையாக ஜம்மு-காஷ்மீர் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயரமான ரயில் பாலத்தை நாளை திறந்து வைக்கிறார் பிரதமர். செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் 1,315 மீட்டர் நீளத்தில் ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளது. ஜம்மு, ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்துவதில் ரயில்வே பாலம் முக்கிய பங்கு வகிக்கும். கத்ரா - ஸ்ரீநகர் இடையே 2 வந்தே பாரத் ரயில் சேவையையும் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
Advertisement