காயிதே மில்லத் 130வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!!
சென்னை: காயிதே மில்லத் 130வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். திருவல்லிக்கேணி, வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் மலர் போர்வை அணிவித்து, மலர் தூவி முதல்வர் மரியாதை செலுத்தினார். முதலமைச்சருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.