புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பின் பிரதமர் மோடியுடன் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று சந்தித்து பேசினார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பின் முதல் முறையாக பிரதமர் மோடியை ஜம்மு முதல்வர் உமர்அப்துல்லா டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டது, ஜம்மு காஷ்மீரில் தற்போது நிலவும் சூழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். பிரதமரின் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பானது சுமார் 30 நிமிடங்கள் நடந்தது.
Advertisement