Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மக்கள் கோரிக்கை தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தால் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்: நீதிபதிகள்

மதுரை: டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரிய மனு மீது மதுரை ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து உத்தரவு பிறப்பிக்க ஆணையிட்டுள்ளார். மக்கள் ஒரு கோரிக்கை தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தால் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மனுவை காரணமின்றி நிலுவையில் வைத்திருந்து உரிய முடிவெடுக்காதது அதிகாரிகள் கடமை மீறுவதாகும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். மதுரை அரசரடி ஹார்விநகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரிய வழக்கில் நீதிபதி உத்தரவு அளித்துள்ளார்.