Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வழக்குகளில் ஆஜராகும்போது இளம் வழக்கறிஞர்கள் முழு அளவில் தயாராக வேண்டும்: மூத்த நீதிபதி சுப்பிரமணியன் அறிவுரை

சென்னை: வழக்குகளில் விசாரணைக்கு ஆஜராகும்போது முழு அளவில் தயாராகி வரவேண்டும் என்று இளம் வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி சுப்பிரமணியன் அறிவுறுத்தினார். சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் பணி ஓய்வு பெறுவதையடுத்து உயர் நீதிமன்றத்தின் சார்பில் அவருக்கு நேற்று வழியனுப்பு விழா நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், நீதிபதியாக பதவி வகித்த 9 ஆண்டுகளில் 37 ஆயிரம் வழக்குகளுக்கும் மேல் நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் தீர்ப்பளித்துள்ளார் என்று பாராட்டினார்.

நிகழ்சியில் ஏற்புரையாற்றிய நீதிபதி சுப்பிரமணியன்,‘நீதிபதிகள் வருவார்கள் போவார்கள். நீதிமன்றம் நீடித்து நீதியை வழங்கும். மேலும், மனைவியை விட வழக்கறிஞர்களை அதிக அளவில் நம்பும் கட்சிக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வழக்குகளில் ஆஜராகும் போது முழு அளவில் தயாராகி வரவேண்டும். குறிப்பாக இளம் வழக்கறிஞர்கள் முழு அளவில் தயாராக வேண்டும்,’ என்று அறிவுரை வழங்கினார். நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் பணி ஓய்வு பெறுவதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 55க குறைகிறது. காலியிடங்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.