சென்னை: தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் என 2 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 7 முதல் 11 செமீ வரை கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆகஸ்ட் 28, 29 ஆகிய 2 நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று 50 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசும்.தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்றுமுதல் 7 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
+
Advertisement