Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

109 டிரோன்கள், 5 ஏவுகணைகள் உக்ரைன் மீது ரஷ்யா விடிய, விடிய தாக்குதல்: 2 பேர் பலி

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை நடத்திய தாக்குதலில் சிறுமி உள்பட 2 பேர் கொல்லப்பட்டனர். உக்ரைன் - ரஷ்யா போர் மூன்றாண்டுகளை கடந்தும் முடிவின்றி நீடிக்கும் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த போரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு நிதி, ஆயுத உதவிகளை செய்து வந்தாலும், உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

அதன்ஒரு பகுதியாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இருவரிடமும் தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தாலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த சூழலில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை உக்ரைனின் பல்வேறு பகுதிகள் மீது ரஷ்யா 109 டிரோன்கள், 5 ஏவுகணைகள் மூலம் விடிய, விடிய தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் சபோரிஜியா பகுதியின் டோலிங்கா கிராமத்தில் 9 வயது சிறுமி கொல்லப்பட்டார். மேலும் 16 வயது சிறுமி காயமடைந்தாள். இதேபோல், கெர்சன் பகுதியில் ரஷ்யா நடத்திய ஷெல் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ஏராளமான வீடுகள் இடிந்து தரை மட்டமாகின. இந்த தாக்குதல் காரணமாக அடுத்த வாரம் இஸ்தான்புல்லில் ரஷ்யா உக்ரைன் இடையே நடக்க உள்ள அமைதி பேச்சுவார்த்தையில் சிக்கல் எழுந்துள்ளது.