அமெரிக்காவின் 50% வரி விதிப்பு; தொழிலாளர்களை பாதுகாக்கவும், நிவாரணம் வழங்கவும் ஒன்றிய அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: அமெரிக்காவின் 50% வரி விதிப்பால் தொழிலாளர்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் ஒன்றிய அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அமெரிக்காவின் 50% வரியால் தமிழ்நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் மட்டும் ரூ.3,000 கோடி ஆயத்த ஆடை வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. ஆயிரக் கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் உள்ளது.
திருப்பூரில் வேலை இழக்கும் அபாயம்
திருப்பூரில் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. தொழில்கள் மற்றும் தொழிலாளர்களையும் பாதுகாக்க ஒன்றிய அரசு உடனடி நிவாரண நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். பொருளாதாரத்தில் அடிப்படை கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களக்கு சலுகைகள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கும் வரிச்சலுகைகளை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.