Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்; ஆஸ்திரேலியா திரில் வெற்றி

விசாகப்பட்டினம்: மகளிர் உலகக் கோப்பை தொடரின் 13வது போட்டி, விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. முதலில் ஆடிய இந்திய அணியின் துவக்க வீராங்கனைகள் பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா அட்டகாசமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 155 ரன் குவித்தனர். 25வது ஓவரில் மந்தனா (66 பந்து, 3 சிக்சர், 9 பவுண்டரி, 80 ரன்), ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் பிரதிகா (75 ரன்) விக்கெட்டை பறிகொடுத்தார். பின் வந்த ஹர்லீன் தியோல் 38, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 22, ஜெமிமா ரோட்ரிகஸ் 33, ரிச்சா கோஷ் 32, அமன்ஜோத் கவுர் 16, தீப்தி சர்மா 1, கிரந்தி கவுட் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். 48.5 ஓவரில் இந்தியா 330 ரன் குவித்து ஆல்அவுட்டானது.

பின், 331 ரன் இலக்குடன் ஆஸி களமிறங்கியது. அந்த அணியின் துவக்க வீராங்கனைகள் கேப்டன் ஆலிஸா ஹீலி, போப் லிட்ச்பீல்ட் அதிரடியாக ஆடி நல்ல துவக்கம் தந்தனர். லிட்ச்பீல்ட் 40 ரன்னில் அவுட்டானார். 22 ஓவர் முடிவில் ஆஸி 1 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்து ஆடிக் கொண்டிருந்தது. ஹீலி 70, எலிசே பெரி 30 ரன்னுடன் களத்தில் இருந்தனர். இதையடுத்து, களம் இறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணி 49 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 331 ரன்களை எடுத்தது. இதன்மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.