சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கல்வி, மருத்துவத்துக்கு உதவுவதாக ஆய்வில் பெண்கள் தகவல் வெளியாகியுள்ளது. தரமான உணவுப்பொருட்கள் வாங்க மகளிர் உரிமைத் தொகையை சிலர் பயன்படுத்துவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட நான்கு அறிக்கைகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது. சமூகத்தில் மிகவும் பின்தங்கிய பிரிவினரை மகளிர் உரிமைத் தொகை சென்று சேர்ந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
+
Advertisement