Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மனைவியை சரமாரி வெட்டிவிட்டு கணவர் தீக்குளித்து தற்கொலை

மதுரை: மதுரை, செல்லூரை சேர்ந்தவர் சம்சுதீன் (42). இவரது மனைவி செய்யதலி பாத்திமா (38). இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். செய்யதலி பாத்திமாவிற்கு முதல் திருமணத்தில் ஒரு மகள் இருக்கிறார். கூலி வேலைக்கு சென்று வந்த சம்சுதீன், வேலைக்கு செல்லாமல் கடந்த 4 மாதங்களாக வீட்டிலேயே இருந்துள்ளார். இதில் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நள்ளிரவு வரை நீடித்ததால், ஆத்திரமடைந்த சம்சுதீன், மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த செய்யதலி பாத்திமாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரிடம் விசாரித்த போலீசார், சம்சுதீனைதேடி நேற்று அதிகாலை வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டிற்குள் சம்சுதீன், பெட்ரோலை ஊற்றி தீக்குளித்த நிலையில் கருகி இறந்து கிடந்தார்.