10 ஆண்டில் நடந்த முறைகேடுகளை விசாரிப்பதில் என்ன பிரச்சனை? அதிமுக தரப்புக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
மதுரை மாநகராட்சியில் அதிமுக ஆட்சியிலும் நடந்த வரி முறைகேட்டையும் விசாரிக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி வழக்கு தொடரப்பட்டது. 10 ஆண்டில் நடந்த முறைகேடுகளை விசாரிப்பதில் என்ன பிரச்சனை? அதிமுக தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி. முறைகேடுகள் எப்பொழுது நடந்தாலும் தவறுதான்; விசாரணை செய்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?. தேவைப்படும் பட்சத்தில் வழக்குப் பதிவு செய்யலாம் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.