டுனெடின்: வெஸ்ட் இண்டீஸ் எதிரான டி20 தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியது. நியூசிலாந்துக்கு சுற்றுபயணம் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீசும், 2வது மற்றும் 3வது போட்டிகளில் நியூசிலாந்தும் வென்றன. 4 போட்டி மழையால் கைவிடப்பட்டதால் 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து தொடரில் முன்னிலை வகித்தது.
தொடரின் 5வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று யுனிவர்சிட்டி ஓவல் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நியூசிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.4 ஓவரில் 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 38 ரன், ஷெப்பர்ட் 36 ரன் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டபி 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
இதையடுத்து, 141 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குக்டன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 15.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கான்வே 47, டிம் ராபின்சன் 45 ரன் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் தொடரை 3-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. ஜேக்கப் டபி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை பெற்றார். இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் நாளை மறுநாள் தொடங்குகிறது.
