Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் இல்ல திருமண விழா: கவர்னர், அரசியல் பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்து

வேலூர்: வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதனின் பேத்தி காதம்பரி எஸ்.விசுவநாதன் திருமண நிகழ்வில் ஆந்திர மாநில கவர்னர் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதனின் பேத்தியும், விஐடி உதவி துணைத் தலைவருமான காதம்பரி எஸ்.விசுவநாதன் - டாக்டர் ஏ.ஷ்ரவன் கிருஷ்ணா ஆகியோரின் திருமணம் திருப்பதியில் நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இத்திருமண விழாவில் ஆந்திர மாநில கவர்னர் எஸ்.அப்துல் நசீர், அவரது மனைவி சமீரா நசீர், பாஜ எம்பி டகுபதி புரந்தரேஸ்வரி, தெலங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். முன்னதாக நேற்று முன்தினம் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி, எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இத்திருமண விழாவில் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன், துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம் மற்றும் ரமணி பாலசுந்தரம், சந்தியா பென்டரெட்டி, அனுஷா செல்வம் உட்பட உறவினர்கள், நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் திரளாக கலந்து கொண்டனர்.