Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காவிரி ஆற்றிலிருந்து 36.76 டி.எம்.சி நீரை திறந்து விட வேண்டும்: காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்

சென்னை: காவிரி ஆற்றிலிருந்து செப்டம்பர் மாதத்தில் தமிழ்நாட்டுக்கு உறுதி செய்யப்பட்டுள்ள 36.76 டி.எம்.சி நீரை திறந்து விட வேண்டும் என காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் இன்று எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 43வது கூட்டத்தில் தமிழ்நாடு உறுப்பினர் மற்றும் அரசு செயலாளர், நீர்வளத்துறை ஜெ.ஜெயகாந்தன், மற்றும் இரா.சுப்பிரமணியம், தலைவர், காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு தற்பொழுது (26.08.2025) மேட்டூர் அணையின் நீர் இருப்பு அதன் முழு கொள்ளளவான 93.470 டி.எம்.சி ஆக உள்ளது எனவும்,

மேட்டூர் அணை இந்த ஆண்டு ஐந்தாவது முறையாக அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது என்றும், தற்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,684 கன அடியாக உள்ளது என்றும், அணையிலிருந்து வினாடிக்கு 12,850 கன அடி நீர் விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக திறந்துவிடப்படுகிறது என்றும் தெரிவித்தார். கர்நாடக அணைகளின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து கணிசமான அளவு தொடர்ந்து வருவதினாலும், தமிழகத்திற்கு 2025, செப்டம்பர் மாதத்திற்கு வழங்கப்பட வேண்டிய நீர் அளவான 36.76 டி.எம்.சி நீரினை உச்ச நீதிமன்ற ஆணையின்படி கர்நாடகம் பில்லிகுண்டுலுவில் உறுதிசெய்யுமாறு ஆணையத்தை வலியுறுத்தினார்.