சேலம்: மேட்டூர் அணையில் நீர் திறப்பு 35,000 கனஅடியில் இருந்து 45,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்துக்கு 22,500 கனஅடி; 16 கண் மதகு வழியாக 22,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு படிப்படியாக 60,000 கன அடி வரை அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து 45,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது என நீர்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.