Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வாக்காளர் சிறப்பு தீவிர தீரத்துத்துக்கு எதிராக கேரளா சட்ட பேரவையில் ஒரு மனதாக தீர்மானம்: தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்துவதற்கான மாற்று வலி என கண்டனம்

திருவனந்தபுரம் : பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்திதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநில வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர சீர்திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு கேரளாவில் விரைவில் வெளியாக உள்ள நிலையில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி திரு உ. கேல்கர் தலைமையில் கடந்த 20 ஆம் தேதி அணைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணியும் எதிர் கட்சியான காங்கிரஸ் தலைமையில்லான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்தனர்.

மேலும் சிறப்பு தீவிர திருத்துத்துக்கான ஆவணங்களின் பட்டியலில் ரேஷன் அட்டையை சேர்ப்பதுடன் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் வரையில் சிறப்பு தீவிரம் திருத்தம் மேற்கொள்வதை ஒத்திவைக்கும்மாறும் அக்கட்சிகள் வலியுறுத்தினார்.

இதை அடுத்து கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை சிறப்பு தீவிர திருத்ததை ஒத்திவைக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு திரு.கேல்கர் பரிந்துரைத்தார் ஆனால் இந்திய தேர்தல் ஆணையம் இது வரை அதற்கு பதில் அளிக்க வில்லை இந்நிலையில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக கேரளா சட்டப்பேரவையில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கேரளாவில் இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தலும் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிரம் திருத்தம் மேற்கோள்வது தவறான செயல் என தீர்மனதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2002 -ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் அடிப்படையில் சிறப்பு தீவிர திருத்தம் என்பது அறிவியல்பூர்வமானது அல்ல என அதில் கூறப்பட்டுள்ளது.

தேசிய குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு மாற்று வழியாகவே சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொள்வதாக அதில் குறிப்பிடபட்டுள்ளது. சிறப்பு தீவிர திருத்தம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கில் அரசியல் சாசன சட்டபடி இது செல்லத்தக்கதா என்பதை குறித்து இன்னும் தீர்ப்பளிக்கவில்லை என்றாலும் இது ணியாயமானது அல்ல எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.