Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தூத்துக்குடி ஆலையில் மின்சார பேருந்துகளை தயாரிக்க வின்ஃபாஸ்ட் நிறுவனம் திட்டம்!!

சென்னை : மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் மின்சார பேருந்து உற்பத்தியில் களம் இறங்குகிறது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தூத்துக்குடியில் உள்ள ஆலையில் மின்சார பேருந்துகளை தயாரிக்க உள்ளது. தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மின்சார கார் உற்பத்திதொழிற்சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இதுவரை தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் ஆலையில் மின்சார கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், மின்சார பேருந்து உற்பத்தியில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் களம் இறங்குகிறது.

அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தூத்துக்குடியில் உள்ள ஆலையில் மின்சார பேருந்துகளை தயாரிக்க உள்ளது. இந்த நிறுவனம், 6 முதல் 12 மீட்டர் நீளமுள்ள மின்சார பேருந்துகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. பேருந்துகளில் 281 kWh பேட்டரி திறன், ஒரே சார்ஜில் 260 கி.மீ. பயணிக்கும் திறன் ஆகிய வசதிகள் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரிகள், தற்போது வியட்நாம் மற்றும் ஐரோப்பாவில் விற்பனையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.