சென்னை: தமிழ்நாட்டில் 1,450 கிராம ஊராட்சி செயலர்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்; மாவட்ட வாரியாக அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. கிராம ஊராட்சி செயலர்களை நிரப்ப டிசம்பர் முதல் வாரத்தில் நேர்காணல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் மாத இறுதிக்குள் பணி நியமன ஆணை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
+
Advertisement