Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வேதாரண்யம் மீனவர்கள் 21 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!!

நாகை: நாகை மாவட்டம் புஷ்பவனம் மீனவர்கள் 21 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நிகழ்திருக்கிறார்கள். வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் 21 பேர் 5 படகுகளில் நேற்று மதியம் கோடியக்கரைக்கு தென்கிழக்கு பகுதியில் மீன்பிடிக்க சென்றனர். மீனவர்கள் 5 படகில் தனி தனியே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை சேர்ந்த படகில் வந்த மூன்று பேர் புஷ்பவனம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி, ராஜகோபால், தங்கநாதன், சுரேஷ், சகாதேவன் ஆகியோருக்கு சொந்தமான 5 படகுகளிலும் தனி தனியே கத்தியை காட்டி மிரட்டி தாக்கியுள்ளனர்.

அவர்கள் படகில் இருந்த 7 செல்போன், ஜிபிஎஸ் கருவி, 150 லிட்டர் டீசல் உள்ளிட்ட 4 லட்சம் மதிப்பிளான பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். மீன்பிடி உபகரங்களை பறிகொடுத்த புஷ்பவனம் மீனவர்கள் வெறும் கையுடன் கரைக்கு திரும்பினார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வேதாரண்யம் பகுதியில் 21 மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்களை தாக்கி 4 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த சம்பவம் மீனவர்கள் மற்றும் கிராமக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.