பொள்ளாச்சியில்: பொள்ளாச்சியில் நேற்று 24 பயனிகள் வேனில் தவியதாண்டி அம்மன் கோவிலுக்கு வந்துஉள்ளன. நேற்று தரிசனத்தை முடித்துவிட்டு அங்கேயே தங்கிவிட்டு இன்று காலை மதுரை செல்வத்திற்காக வேனில் புறப்பட்டு சென்றுஉள்ளனர். மணப்பாறை அடுத்து புத்தாநத்தம் அடுத்து ஒரு வளைவில் திரும்பும்போது ஓட்டுநர் கட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது இதனை கண்ட அப்பகுதி மக்கள் வேனில் இருந்தவர்களை மீட்டு தனியார் மற்றும் 108 அம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதில் இருந்து 8 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது . இந்த நிகழ்வு இடத்தில் l வடிவிலான வளைவாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. நான்கு வலி சாலையாக இருப்பதால் அதிவேகத்தில் வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகின்றன இதனை வந்து சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சாலையில் கற்களை போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
45 நிமிடக்களுக்கு மேலாக மறியல் போராட்டம் நடந்துவருகிறது புத்தாநத்தம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை மக்கள் கைவிடவில்லை. நெடுசாலைதுறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.