கோபேஷ்வர்: உத்தரகாண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. கனமழையை தொடர்ந்து பல இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. குந்தாரி லகா பாலி, சர்பானி, சேரா, துர்மா ஆகிய கிராமங்களில் நிலச்சரிவினால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
மீட்பு படையினர் விரைந்து வந்த அந்த பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். நேற்று முன்தினம் 2 பேரின் உடல்களை மீட்டனர். இந்த நிலையில் நேற்று மேலும் 5 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. 12 பேர் படுகாயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.