பயிற்சி: அப்ரன்டிஸ்.
மொத்த காலியிடங்கள்: 532.
உதவித் தொகை: மாதம் ரூ.15 ஆயிரம்.
வயது: 01.10.2025 அன்று 20 முதல் 28க்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/ஒபிசியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படி அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.800/-. மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.400 மட்டும். இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி யினருக்கு கட்டணம் கிடையாது.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் பொது அறிவு, நிதி அறிவு, பொது ஆங்கிலம், ரீசனிங் ஏபிலிட்டி, கம்ப்யூட்டர் அப்டிடியூட், குவாண்டிடெட்டிவ் அப்டிடியூட் ஆகிய பாடங்களிலிருந்து 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் முதலில் தங்களது கல்வித்தகுதி பற்றிய விவரங்களை www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் www.uco.bank.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.11.2025.
 
  
  
  
   
