போபால்: மத்திய பிரதேச நெல்வயலில் காசநோயை உருவாகும் மெலியோடோசிஸ் என்னும் பாக்டீரியா கிரீமி உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவ ஆய்வு குழு எச்சரித்துள்ளது. போபாலில் உள்ள எய்ம்ஸ் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்வுகள் குறித்து கூட்டணி நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் கடலோர மாநிலங்களான கர்நாடக, ஒடிசா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் மெலியோடோசிஸ் கிரீமி பரவி உள்ளதாக கூறியுள்ளது.
மேலும் மத்திய பிரதேச நெல் வயல்களில் காசநோயை பிரதிபலிக்கும் மெலியோடோசிஸ் பாக்டீரியாக்கள் இருப்பதாகவும் எதிர்காலத்தில் மாநிலத்தில் பேராபத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளனர். மேலும் 10ல் 4 பேருக்கு உயிரிழப்பு ஏற்படும் என எய்ம்ஸ் கூறியுள்ளது. தண்ணீர் மாசு மூலம் காசநோயை உருவாக்கும் மெலியோடோசிஸ் பாக்டீரியாக்கள், மத்திய பிரதேச நெல் வயல்களில் உள்ளது. மார்பக நோயால் பாதிக்கப்பட்ட 45வயது நோயாளி மூலம் தெரியவந்ததாகவும் குறிப்பிடத்தக்கது.