Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டிரம்பின் பொருளாதார கொள்கைகள் அமெரிக்காவிற்கு சுய அழிவை ஏற்படுத்தும்: முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் கருத்து

ஐதராபாத்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சில பொருளாதார கொள்கைகள் வடஅமெரிக்க நாட்டிற்கும் சுய அழிவை ஏற்படுத்தும் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் உயர்கல்விக்கான அறக்கட்டளையின் 15வது பட்டமளிப்பு விழாவில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரங்கராஜன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘‘பிரிக்ஸ் நாடுகளின் பெயரைக் குறிப்பிடாமல், வர்த்தகம் சுதந்திரமாக இருக்கும் பல்வேறு நாடுகளின் தொகுதிகள் தோன்றுவது தவிர்க்க முடியாதது.

ஆனால் இறுதி இலக்கு சுதந்திரமான வர்த்தகத்துடன் கூடிய ஒரு பெரிய உலகமாக இருக்க வேண்டும். இன்றைய உலகம் நிலையற்றதாக உள்ளது. அதிபர் டிரம்பின் சில பொருளாதாரக் கொள்கைகள் உலக வர்த்தகத்தை ஸ்தம்பிக்கப்படுத்தியுள்ளன. நல்லெண்ணம் மேலோங்கும் என்றும், அமெரிக்காவில் கொள்கை வகுப்பாளர்கள் தாங்கள் பின்பற்ற விரும்பும் கொள்கைகள் சுய அழிவை ஏற்படுத்தும் என்பதை உணர்வார்கள் என்றும் நம்புகிறோம்” என்றார்.