Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

திறன் இயக்க மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு வரை பயிற்சி!

பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு அனுப்​பியுள்ள சுற்​றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; அரசுப் பள்​ளி​களில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களின் மொழிப்​பாடம் மற்​றும் கணிதத் திறனை மேம்​படுத்​தும் வகை​யில் திறன் இயக்​கம் கடந்த ஜூலை​யில் அமல்​படுத்​தப்​பட்​டது. இந்த திட்​டத்​துக்​காக தேர்​வான மாணவர்​களுக்கு பயிற்சி அளிக்​கப்​பட்டு காலாண்டுத் தேர்வு நடத்​தப்​பட்​டது. தேர்வு முடிவு​களின்​படி அடிப்​படைக் கற்றல் விளைவு​கள் பகு​தி​யில் அனைத்து மாணவர்​களுக்​கும் தேர்ச்சி பெற இன்​னும் கூடு​தல் காலஅவ​காசம் தேவைப்​படு​கிறது.

எனவே, இந்த திட்​டத்​தில் தேர்​வான அனைத்து மாணவர்​களும் அடிப்​படைக் கற்​றல் விளைவை அடையும் வகை​யில் அடுத்த 6 வாரங்களுக்கு (அரை​யாண்​டுத் தேர்வு வரை) தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்​டும். தினம் ஒரு பாடம் என 90 நிமிடங்​கள் கற்​பிக்​கப்பட வேண்​டும். திறன் இயக்​கத்​துக்கு தேர்​வான அனைத்து மாணவர்​களும் மாதாந்​திர மதிப்​பீட்​டுத் தேர்​வில் பங்​கேற்​பது அவசி​யம். நடப்பு மாதத்​துக்​கான மாதாந்​திரத் தேர்வு நவம்​பர் 25 முதல் 27ஆம் தேதி வரை வழக்​க​மான நடை​முறை​யின்​படி நடை​பெறும். திறன் இயக்​கத்​தில் அல்லாத மாணவர்​களுக்கு வழக்​க​மான நடை​முறை​யின்​படி அரை​யாண்​டுத் தேர்வு நடத்​தப்​படும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.