Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாளை அமாவாசை முன்னிட்டு பூக்கள் விலை 2 மடங்கு உயர்வு: ஒரு கிலோ மல்லி ரூ.1200க்கு விற்பனை

அண்ணாநகர்: நேற்றுமுன்தினம் ஆடி மாதம் முடிவடைந்ததால் அன்றைய தினம் பூக்களின் விலை குறைந்தது. நாளை அமாவாசையையொட்டி இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது.இதன்படி, ஒரு கிலோ மல்லி, ஐஸ் மல்லி 900 ரூபாயில் இருந்து 1,200க்கும் முல்லை, ஜாதிமல்லி 750 ரூபாயில் இருந்து 800க்கும் கனகாம்பரம் 500 ல் இருந்து 1,300க்கும் சாமந்தி 160ல் இருந்து 200க்கும் சம்பங்கி 100ல் இருந்து 200க்கும் அரளி பூ 100ல் இருந்து 300க்கும் பன்னீர்ரோஸ் 60 ல் இருந்து 160 க்கும் சாக்லேட் ரோஸ் 140 இருந்து 160 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘’ஆடி மாதம் முடிந்ததால் பூக்களின் விலை குறைந்தது. நாளை அமாவாசை என்பதால் அனைத்து பூக்களின் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது. நாளை மீண்டும் பூக்களின் விலை உயரும். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை விலை உயர்வு நீடிக்கும் என்பதால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்’ என்றார்.