சென்னை: தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு தமிழகத்தில் இன்று நடக்கிறது. இந்த தேர்வில் 2 லட்சத்து 70 ஆயிரத்து 508 பேர் எழுதுகின்றனர். இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் 2025-2026ம் கல்வி ஆண்டுக்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு இந்த தமிழகம் முழுவதும் நடக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி அளவில் முடியும். இதற்காக 950 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்பில் படிக்கும் மாணவர்கள் 2 லட்சத்து 70 ஆயிரத்து 508 பேர் இந்த தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர். மேற்கண்ட தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்று முதன்மை மதிப்பெண்கள் பெறும் 1500 பேர் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் வழியாக மாதந்தோறும் ரூ.1500 என இரண்டு வருடங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். இந்த தேர்வில் 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்களும், 50 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.