திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை: கோயில் நிர்வாகம் எச்சரிக்கை
திருச்செந்தூர்: இனி திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில் பெண் ஒருவர் நடனமாடி ரீல்ஸ் எடுத்தது சர்ச்சையான நிலையில், கோயில் வளாகத்திற்குள் இந்த எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டது.


