Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருமங்கலம் மேம்பாலத்தில் பைக் மீது சரக்கு வேன் மோதியது மனைவி பலி; கணவர் படுகாயம்: தொடரும் விபத்தால் பரபரப்பு

அண்ணாநகர்: திருமங்கலம் மேம்பாலத்தில் பைக் மீது சரக்கு வேன் மோதியதில் மனைவி உயிரிழந்தார். படுகாயம் அடைந்த கணவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னை ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த தம்பதி ஜெயராஜ்(60), தேவகி (57). கூலி தொழிலாளர்கள். வேலை செய்வதற்காக மாதவரத்துக்கு இன்று காலை பைக்கில் சென்றனர். திருமங்கலம் மேம்பாலம் மீது சென்ற போது பின்னாடி வேகமாக வந்த சரக்கு வேன் திடீரென அவர்களது பைக் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட தம்பதி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அப்போது கணவர் கண்முன்னே ரத்தவெள்ளத்தில் தேவகி பரிதாபமாக இறந்தார்.

விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விரைவாக சென்று படுகாயத்துடன் கிடந்த ஜெயராஜை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேவகி உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குபதிவு செய்து சோழவரம் பகுதியை சேர்ந்த டிரைவர் மணி(50) கைது செய்து சரக்கு வேனை பறிமுதல் செய்தனர்.

‘’திருமங்கலம் மேம்பாலத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் மொபட் மீது லாரி மோதியதில் கூலி தொழிலாளி இறந்தார். தற்போது பெண் கூலி தொழிலாளி இறந்துள்ளார். திருமங்கலம் மேம்பாலத்தில் வேகத்தடை அமைக்கவேண்டும். தினமும் போக்குவரத்து போலீசார் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபடவேண்டும்’ என்று சமூகநல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.