Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

திருக்கோவிலூர் அருகே சொத்து தகராறு டிராக்டர் ஏற்றி தந்தையை கொன்ற கொடூர மகன்

திருக்கோவிலூர்: சொந்து தகராறில் தந்தையை டிராக்டர் ஏற்றி கொன்ற மகனை போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த ஒடுவன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (70), விவசாயி. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி சுசீலாவுக்கு ஒரு மகனும், 2வது மனைவி சரஸ்வதிக்கு சந்திரசேகர், சிவக்குமார், சிவசங்கர் ஆகிய 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில், பழனி கடந்த சில வருடங்களுக்கு முன் 2வது மனைவி சரஸ்வதியின் மகன் சந்திரசேகருக்கு அதிகளவில் நிலமும், 5 பவுன் தங்க நகையும் கொடுத்துள்ளார்.

ஆனால் சந்திரசேகர் தந்தை பழனியை சரிவர கவனித்து கொள்ளாததால் மனமுடைந்த பழனி, சந்திரசேகர் மீது நிலம் சம்பந்தமாக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு சம்பந்தமாக கடந்த 2 வருடமாக பழனி குடும்பத்துக்குள் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பழனி தொடர்ந்த வழக்கு இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதால், ஆத்திரமடைந்த அவரது மகன் சந்திரசேகர் நேற்று காலை பழனி, ஒடுவன்குப்பம் ஏரி அருகே செல்லும்போது பின்தொடர்ந்து சென்று அவர் மீது டிராக்டரால் ஏற்றியுள்ளார்.

இதில் பழனி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்றவர்கள் கூச்சலிடவே சந்திரசேகர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். தகவலறிந்து வந்த போலீசார், பழனியின் சடலத்தை போலீசார் கைப்பற்றி விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பழனியின் முதல் மனைவி மகன் சக்கரவர்த்தி, கண்டாச்சிபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் தந்தையை கொன்ற சந்திரசேகர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி அன்பரசி மற்றும் உறவினர்கள் நெடுஞ்செழியன் (25), ஜெயக்குமார் (35), மகன் ஏழுமலை (50) ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிந்தனர். அதில் சந்திரசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.