திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே பல ஆண்டுகளாக இறந்தவர்களை தண்ணீரில் சுமந்து சென்று அடக்கம் செய்யும் அவலம் தொடர்ந்து நடந்து வருகிறது. காக்கணாம்பாளையம் கூடபட்டு வள்ளுவர் காலனி ஆகிய கிராமத்தை சேர்ந்த மக்கள் இறந்தவர்களை அடக்கம் செய்ய பாம்பாற்றில் இறங்கி கடந்து செல்லும் நிலை உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் தரை பலம் அமைக்க பூமிபூஜை போடப்பட்டும் எந்த பணியும் தொடங்கப்படவில்லை எனவும் இதனால் தான் இறந்தவர்களை தண்ணீரில் சுமந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவும் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.