சென்னை: பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருது தோட்டா தரணிக்கு வழங்கப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரான்ஸ் அரசின் மையத்தில் தோட்டா தரணிக்கு செவாலியே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. கலை, இலக்கியம், அறிவியலில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் விதமாக பிரான்ஸ் அரசு செவாலியே விருது வழங்கி வருகிறது. முன்னதாக தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர் சிவாஜி, கமல் உள்ளிட்டோர் செவாலியே விருதை பெற்றுள்ளனர்
+
Advertisement
