Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தஞ்சாவூர் அருகே விபத்து பைக் மீது கார் மோதி 2 குழந்தை உள்பட 3 பேர் பலி

*மனைவி, மகள் படுகாயம்

வல்லம் : தஞ்சாவூர் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் 2 குழந்தை உள்பட 3 பேர் சம்பவ இடத்தில் இறந்தனர். படுகாயம் அடைந்த மனைவி, மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் அருகே வல்லம் கொள்ளுப்பேட்டை தெருவை சேர்ந்த பக்கரி மகன் அறிவழகன்(37). விவசாயி. இவரது மனைவி உஷா(35). இவர்களது மகள்கள் ரூபா(10), பாவ்யாஸ்ரீ(9).

இந்த நிலையில் நேற்று மாலை 6 மணியளவில் பனங்காடு பகுதியில் உள்ள கோயிலுக்கு செல்வதற்காக அறிவழகன் தனது மனைவி, 2 மகள்கள் மற்றும் தங்கை மகள் தேஜாஸ்ரீ(4) ஆகியோருடன் பைக்கில் சென்றார்.

கேரளா திருச்சூர், சாலக்காடு பகுதியை சேர்ந்த முகமது ரியாஸ்(31) என்பவர், நண்பர்கள் 6 பேருடன் நாகூர் தர்காவிற்கு ஒரு காரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது மாதாக்கோட்டை பைபாஸ் மேம்பாலம் அருகில் வரும்போது பைக் மீது கார் அதிவேகமாக மோதியது. இதில் பைக்கில் இருந்த 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

அறிவழகன் மற்றும் அவரது மகள் பாவ்யாஸ்ரீ, தங்கை மகள் தேஜாஸ்ரீ ஆகிய 3 பேரும் படுகாயத்துடன் சம்பவ இடத்திலேயே இறந்தனர். உஷா, ரூபா படுகாயமடைந்தனர்.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வல்லம் டிஎஸ்பி கணேஷ்குமார் மற்றும் தமிழ் பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் படுகாயத்துடன் கிடந்த உஷா மற்றும் ரூபா ஆகியோரை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்தில் இறந்த 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிந்து காரை ஓட்டி வந்த முகமது ரியாஸை கைது செய்தனர். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.