Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை அவகாசம் நீட்டிப்பு

சென்னை: டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் கட்​டாயக் கல்வி உரிமை சட்​டத்​தின்​படி, இடைநிலை ஆசிரியர்​கள், பட்​டதாரி ஆசிரியர்​கள் ஆகியோர் ஆசிரியர் தகுதி தேர்​வில் (டெட்) தேர்ச்சி பெறு​வது கட்​டாய​மாகும். இந்​நிலை​யில், 2025ம் ஆண்டு டெட் தேர்​வுக்​கான அறி​விப்பை ஆசிரியர் தேர்வு வாரி​யம் கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி வெளி​யிட்​டது. இதற்​கான ஆன்​லைன் விண்​ணப்ப பதிவு அன்​றைய தினமே தொடங்​கியது. இடைநிலை ஆசிரியர்​கள் டெட் முதல் தாள் தேர்​வுக்​கும் பட்​ட​தாரி ஆசிரியர்​கள் 2ம் தாள் தேர்​வுக்​கும் விண்​ணப்​பித்து வந்தனர். நவம்​பர் 15, 16ம் தேதி​களில் தேர்​வு​கள் நடை​பெற உள்​ளன.

இந்நிலையில் டெட் தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கும் அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் செப்.10ம் தேதி (நாளை) வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இடைநிலை ஆசிரியர்​களும், பி.எட். முடித்த பட்​ட​தாரி ஆசிரியர்​களும் https://trb.tn.gov.in என்ற இணை​யதளம் வாயி​லாக 10ம் தேதி (நாளை) மாலை 5 மணி வரை விண்​ணப்​பிக்கலாம். இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெறும் இறுதி ஆண்டு மாணவர்​கள், பி.எட். இறுதி ஆண்டு படிப்​பவர்​களும் டெட் தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கலாம்.