Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே அம்மாபட்டியில் வேண்டுராயபுரத்தை சேர்ந்த தங்கப்பாண்டி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்கு 15 அறைகளில் பட்டாசு தயாரிப்பு பணி நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் மாலை தொழிலாளர்கள் வேலை முடிந்து வீட்டிற்கு சென்றுவிட்டனர். சிவகாசி பகுதியில் நேற்று காலை தொடர்ந்து சாரல் மழை பெய்தது. இதில் பட்டாசு ஆலையின் வெடிமருந்து அறையில் எஞ்சியிருந்த ரசாயன கலவை நீர்த்து வெடிவிபத்து ஏற்பட்டது.

இதில் ஆலையின் ஒரு அறை இடிந்து தரைமட்டமானது. இதனால், சுமார் 10 கிமீ சுற்றளவு கிராமங்களில் அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். நேற்று விடுமுறை என்பதால் பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் யாரும் இல்லை. இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து சிவகாசி தீயணைப்பு துறையினர் சென்று தீயை கட்டுப்படுத்தினர்.