தென்காசி: தென்காசி அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.தென்காசி மாவட்டம் இடைக்கால் அருகே உள்ள துரைசாமிபுரம் கிராமத்தில் கையேசர் என்ற தனியார் பேருந்தும், தென்காசியிலிருந்து ராஜபாளையம் சென்று கொண்டிருந்த போது கோவில்பட்டியிலிருந்து தென்காசி நோக்கி வந்த மற்றொரு தனியார் பேருந்தான SRM கோபாலன் ஆகிய இரண்டு பேருந்துகளும் இடைக்கால் அருகே உள்ள துரைசாமியாபுரத்தில் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர்.
இதில், 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு முதலுதவிக்காக அனுப்பி வைத்தனர். தற்போது அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பேருந்தில் பயணம் செய்த 6 பேர் பலியான நிலையில் அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள், எங்கிருந்து வந்தார்கள் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய விபத்து தென்காசி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



