குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளராக தமிழரை அறிவித்தாலும் தமிழர்கள் பாஜகவை ஏற்க மாட்டார்கள்: செல்வப்பெருந்தகை
சென்னை: குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளராக தமிழரை அறிவித்தாலும் தமிழர்கள் பாஜகவை ஏற்க மாட்டார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். மண்ணை கைபற்ற மன்னர்கள் படையெடுப்பது போல் அமித்ஷா தொடர்ச்சியாக படையெடுத்து வந்தாலும் பயன் ஏற்படாது என அவர் கூறியுள்ளார்.